brisbanetamilschool

About Us

Home /
About Us
About Us
Welcome to our school, the place where your child will learn Tamil language and culture in a friendly and social atmosphere.

Our school was established in 1986 and continues to be cultural and learning centre for students from India, Sri Lanka, Malaysia and Singapore.

We thrive to give the highest level of education along with our cultural values to students. The school curriculum is developed based on the guidelines from the Department of Education in Queensland. The teachers are trained by the LOTE (Language other than English) to deliver the best results in teaching the language for students living in Australia.

Neil Jackson

CEO Musicy

0
Graduated Student
0
Award Winning
0
Years Of Experience
0
Expert Teacher
Why Choose Us

We Give You The Best Facilities to Learning

Free Equipment

Lorem ipsum dolor sit amet, consectetur.

High Tech

Lorem ipsum dolor sit amet, consectetur.

Music Studio

Lorem ipsum dolor sit amet, consectetur.

Expert Teacher

Lorem ipsum dolor sit amet, consectetur.

Join Our Class

Learn The Music From The Core & Become Mastery

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Donec quam felis, ultricies nec.
Teaching Ability
90%
Student Satisfaction
80%
Our Teacher

Our Expert Teacher

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa.
John Lewis

Vocal

John Lewis

Kathy Davis

Vocal

Kathy Davis

David Cox

Guitar

David Cox

1986ம் ஆண்டு மே மாதம்‌ 32ம் திகதி பிறிஸ்பேனில்‌ வாழ்ந்த ஒரு சில தமிழர்களால்‌ எமது இளைய சமுதாயத்திற்கு தமிழ்‌ மொழியையும்‌ கலாச்சாரத்தையும்‌ கற்றுக்‌ கொடுக்க வேண்டும்‌ என்ற ஒரு நோக்கத்திற்காக அயராத உழைப்பினால்‌ பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலை என்ற இந்த அறிவுபீடம்‌ உருவாக்கபட்டது. பிறிஸ்பேன்‌ பல்‌ கலாச்சார திணைக்களத்தின்‌ ஒருங்கிணைப்பாளராக இருந்த திருமதி டயானா பட்லர்‌ அவர்களால்‌ பிறிஸ்பேன்‌ அரச உயர்‌ பாடசாலையில்‌ (Brisbane state High School) மங்கள விளக்கேற்றி தமிழ்‌ வாழ்த்துடன்‌ இந்த பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாணவர்களின்‌ பிரயாண வசதியை கருத்திற்கொண்டு, எமது பாடசாலை ஒக்ஸ்லி அரச உயர்‌ பாடசாலைக்கு இடமாற்றம்‌ செய்யப்பட்டது.  பிறிஸ்பேன்‌ மட்டுமன்றி பிறநகர்களில்‌ வாழ்ந்த தமிழர்களும்‌ தங்கள்‌ பிள்ளைகளுக்கு தமிழ்‌ கற்றுக்‌ கொடுக்க வேண்டும்‌ என்ற வேண்டுகோளுக்கு இணங்க 1994ம்‌ ஆண்டு முதல்‌ முறையாக தபால்‌ மூலமான கல்வி முறையை பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 

பிறிஸ்பேன்‌ வடபகுதியில்‌ ர்‌ தமிழர்களின்‌ வேண்டுகோளுக்கு இணங்க 2000ம் ஆண்டு தமிழ்ப்‌ பாடசாலையின்‌ வட வளாகமொன்று மிச்செல்டன்‌ (Mitchelton) அரச உயர்‌ பாடசாலையில்‌ ஆரம்பிக்கபட்டது. 2001ம் ஆண்டு முடிவில்‌ ஒக்ஸ்லி அரச உயர்‌ பாடசாலை மூடப்பட்ட காரணத்தால்‌ 2001ம் ஆண்டு தை மாதத்திலிருந்து ஜிண்டலியில்‌ அமைந்துள்ள சென்டினரி அரச உயர்‌ பாடசாலைக்கு தமிழ்‌ வகுப்புகள்‌ இடமாற்றம்‌ செய்யப்பட்டது.

பிறிஸ்பேன்‌ தென்பகுதியில்‌ தமிழர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்ததாலும்‌ , அங்கு வாழ்ந்த தமிழர்களின்‌ வேண்டுகோளுக்கும்‌ இணங்க 2001ம் ஆண்டு பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலையின்‌ இன்னுமொரு வளாகம்‌ பிறிஸ்பேன்‌ தென்பகுதியில்‌  சனிபாங்க்‌ உயர்‌ பாடசாலையில்‌ (Sunnybank State High School) ஆரம்பிக்கபட்டது. காரணத்திற்காக 2005ம்‌ ண்டூ பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலையின்‌ முன்று வளாகங்களும்‌ (சென்டினரி, மிச்செல்டன்‌, சனிபாங்க்‌) ஒன்றிணைக்கப்பட்டு கிறிபித்‌ (Grifith) பல்கலைக்கழக வளாகத்தில்‌ தமிழ்‌ வகுப்புகள்‌ நடத்தப்பட்டன. 2005ம்‌ ஆண்டு மூன்றாம்‌ பருவத்தில்‌ கொலன்ட்பார்க்‌ (Holland Park) அரச உயர்பாடசாலைக்கு பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலை மாற்றப்பட்டு 17 வருடங்களாக இன்றுவரை ஒரேயிடத்தில்‌ தமிழ்‌ வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

பொற்கரையில்‌ (Gold coast)   தமிழர்களின்‌ எண்ணிக்கை அதிகரிக்க அங்கு வாழ்ந்த தமிழ்‌ மக்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க 2006ம்‌ ஆண்டில்‌ பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலையின்‌ பொற்கரை வளாகம்‌ Southport State High School இல்‌ ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‌  தமிழ்‌ வகுப்புகள்‌ நடைபெறுகின்றன. இதுபோல்‌ தூவூம்பா (Toowoomba) நகரிலும்‌ தமிழ்‌ மக்களின்‌ எண்ணிக்கை  அதிகரிக்க அங்கு வாழும்‌ மக்களின்‌ நலனுக்காக 2012ம்‌ ஆண்டு பிரிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலையின்‌ தூவூம்பா வளாகம்‌ Darling Heights State School இல்‌ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‌ வகுப்புகள்‌ நடைபெறுகின்றன.

லோகன்‌ நகரில்‌ (Logan city) வாழ்ந்த  தமிழர்களுக்கு தூரப்பிரயாண வசதியில்லாத காரணத்தால்‌ சிறிது காலம் லோகன்‌ வளாகத்தில் வகுப்புகள்‌ நடத்தப்பட்டது. 

மொழியை கற்றுக்‌ கொள்வது வெறும்‌ புத்தகங்களில் இருந்து மட்டுமன்றி, அந்த மொழியுடன்‌ இணைந்த கலை கலாசாரத்தை அறிந்திருப்பதிலும்‌, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதிலும்‌ தங்கியிருக்கின்றது என்பதை நன்கறிந்த பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலை நிர்வாகம்‌ கலை நிகழ்ச்சிகளையும்‌ விளையாட்டுப்‌ போட்டிகளையும்‌ வருடாந்த ஒன்று கூடலையும்‌ நடத்தி வருகிறது.
பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலையில்‌ தமிழ்‌ மொழியைக்‌ கற்றுக்‌ கொடுக்கும்‌ முறை பல பரிமாணங்களை அடைந்து, பல முன்னேற்றங்களைக்‌ கண்டுள்ளது. ஆரம்ப காலங்களில்‌ இலண்டன், சிங்கப்பூர் மற்றும் சிட்னியிலுள்ள  தமிழ்ப் பாடசாலைகளின் பாடத்திட்ட வழிமுறைகளைப்  பின்பற்றியே பிறிஸ்பேன் தமிழ் பாடசாலையின் பாடத்திட்டங்கள் அமைந்திருந்தன. பின்னர்‌ குவின்ஸ்லாந்து பன்மொழிக்கலாச்சாரத்‌ திணைக்களத்தின்‌ LOTE பாடத்திட்ட நெறிகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவின்‌ பல்லின கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில்‌ பாடத்திட்டம்‌ மாற்றி அமைக்கப்பட்ட, பன்மொழிக்‌ கலாச்சாரத்திணைக்களத்தினால்‌ கொடுக்கப்பட்ட பாடத்திட்டங்கள்‌ பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலையினால்‌ பாரிய அளவில்‌ மொழி பெயர்க்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும்‌ வழங்கப்பட்டது. இவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட தமிழ்‌ மொழிப்‌ பாடத்திட்டத்தை மற்றைய மொழிப்‌ பாடசாலைகளுக்கு பன்மொழித்திணைக்களம்‌ கொடுத்துதவியது.

 

வருடா வருடம்‌ தபிழ்ப் போட்டிகள்‌ (பேச்சு, கவிதை, வாய்மொழித்‌ : தொடர்பாற்றல்‌, எழுத்து) நடாத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு இயல் இசை நாடகத்துக்கு பயிற்சிகள் கொடுத்து வருடாந்தக் கலைவிழாவை பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலை நடத்தி வருகின்றது. மாணவர்களின்‌ தமிழ்ப்பேச்சு வன்மையை மெருகூட்டவும்‌, கலாச்சார உணர்வை வளர்க்கவும்‌ இந்தக்‌ கலை விழா உதவுகிறது. மாணவர்கள்  முத்தமிழில்‌ பல தரமான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழ்‌ மாணவர்கள்‌ தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள்‌. 

பிறிஸ்பேன்‌ தமிழ்ப்‌ பாடசாலை நடத்தி வரும்‌ வருடாந்த விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆரவத்துடனும் பங்கு பற்றி வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. பிறிஸ்பேன்‌ தமிழர்கள் அனைவரும் இணைந்து பங்கேற்கும் ஒரேயொரு விளையாட்டுப் போட்டியாக இது ஆரம்ப காலத்திலே இருந்து வருகின்றது. ஒளவை, கண்ணகி, மங்கை என்ற மூன்று இல்லத்துள்‌ மாணவர்கள்‌ பங்கு பற்றி தங்கள்‌ இல்லங்களுக்கு பரிசு சேர்க்க முயற்சிப்பதை ஒரு இனிய அனுபவமாக மாணவர்களும்‌ பெற்றோர்களும்‌ கருதுகிறார்கள்‌. 

– 30ம் ஆண்டு கலைவிழா சிறப்பு மலருக்காக முன்னாள் அதிபர் கலாநிதி செந்தில்வாசன்